நலன்புரி நன்மைகள் சபையானது, நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் பிரிவு 3 இன் அடிப்படையில் நிறுவப்பட்டது. இது 15 ஆம் திகதி பிப்ரவரி மாதம் 2016 முதல் செயற்படுகிறது. 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி அனுகூலங்கள் சட்டம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்தமானியின் கீழ் அதிவிசேட வர்த்தமானி இலக்கம் -1952/22 , பெப்ரவரி 02, 2016 செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டது.

நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் 2வது பிரிவின்படி அரசியலமைப்பு சபையின் ஆலோசனையுடன் கௌரவ. நிதி அமைச்சர் அதன் ஆணையாளர் மற்றும் உறுப்பினர்களை நியமித்துள்ளார். நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின்படி நலன்புரி நன்மைகள் சபையின் முக்கிய செயல்பாடுகள் பின்வருமாறு;.

  • சட்டத்தால் உரித்தாக்கப்பட்ட அல்லது குறித்தொதுக்கப்பட்ட தத்துவங்களையும், கடமைகளையும், பணிகளையும் பிரயோகிப்பதற்கும் மற்றும் நிறைவேற்றுவதற்கும்,
  • மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர் அல்லது கிராம உத்தியோகத்தர் அல்லது அரச உத்தியோகத்தர் எவருக்கேனும் சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம், கடமை அல்லது செயல்பாடு என்பனவற்றை ஒப்படைத்தல் ,
  • நலன்புரி நன்மைகள் திட்டங்களை நிறுவுதல்
    1. தகுதிக்கான அளவுகோல்களை உருவாக்குதல்
    2. திட்டத்தின் அடிப்படையில் நிதி ஒதுக்கீட்டைக் குறிப்பிடுதல்
    3. திட்டம் தொடங்கும் திகதியை குறிப்பிடுதல்
    4. வழங்கப்பட வேண்டிய நிதி அல்லது பிற நன்மைகளைக் குறிப்பிடுதல்
    5. நன்மைகளைப் பெறுவதற்கு நபர்களுக்கு உரிமையுள்ள காலத்தைக் குறிப்பிடுதல்
    6. பயனாளிகளாக இருக்கும் மொத்த நபர்களின் எண்ணிக்கையை குறிப்பிடுதல்
  • பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு தேர்வுக் குழுக்கள் மற்றும் மேல்முறையீட்டுக் குழுக்களை நியமித்து, ஆட்சேபனைகள் மற்றும் குறைகளை நிர்வகித்தல்.
  • Appoint selection committees and appeal committees to beneficiary selection and manage objections and grievances.

Gazette_No_2429_02_March_24_2025   සිංහල  தமிழ்  English

WELFARE  BENEFITS  ACT,  No.  24  OF  2002  සිංහල  தமிழ்  English

News & Events

09
ஏப்2026
Community Productivity Model Village Program

Community Productivity Model Village Program

The inauguration ceremony of the 'Daya Nanwana...

18
மே2017

சமுர்த்தி திட்டம்

நலன்புரி நன்மைகள் சபையானது, நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் பிரிவு...

குடியுரிமை சாசனம்

Scroll To Top